செய்திகள் :

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

post image

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக அவர் இல்லாமல் புனித ஆண்டுப் பணிகளை வாடிகன் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 3ஆம் தேதி போப் பிரான்சிஸுக்கு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதன் உதவியுடன் சுவாசித்ததாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நான்காவது வாரமாகத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவரும் போப் பிரான்சிஸ் குறித்து வாடிகன் நல்ல தகவல்களை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், காய்ச்சல் நீங்கி அவரின் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிர்வாதக் கூட்டத்தில், போப் பிரான்சிஸுக்கு பதிலாக அவரின் நெருங்கிய நண்பரான கனடாவைச் சேர்ந்த கார்டினல் மைக்கேல் ஸெர்னி ஆசிர்வாதக் கூட்டங்களை நடத்தி வருகிறார். வாடிகன் திருச்சபையின் அன்றாட திருப்பணிகளும் போப் இல்லாமல் நடைபெற்று வருவதாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமெரிக்கா: ஹிந்து கோயிலில் தாக்குதல்

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமா? வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் திரிந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

வாஷிங்டன் : வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சனிக்கிழமை(மார்ச் ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஹமாஸின் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக... மேலும் பார்க்க

சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி

சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படை... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில... மேலும் பார்க்க