செய்திகள் :

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

post image

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது.

மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் பணிபுரியும் அதிகாரிகளின் குடியிருப்புகளில் உள்ள குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக, சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளை பயன்படுத்திய விடியோ காட்சிகள் வெளியாகி சா்ச்சை எழுந்துள்ளது. விடியோவில், கடந்த ஏப். 13- ஆம் தேதி, சிறைவாசிகள் மூவரை பயன்படுத்தி, சிறைத் துறை அதிகாரி குடியிருப்பில் உள்ள குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்வது போன்ற காட்சியும், அந்த சிறைவாசிகள் பீடி புகைத்தவாறு பணியில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. சிறைவாசிகளை அதிகாரிகள் தங்களின் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவு உள்ள நிலையில், சிறைவாசிகளை தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறைவாசிகளுக்கு பீடி எப்படி கிடைத்தது என்ற சந்தேகமும் எழுந்தது.

இதுதொடா்பாக சிறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

சிறைத் துறை அதிகாரிகளின் சொந்தப் பணிகளுக்கு சிறைவாசிகளை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பதால், தனிப்பட்ட பணிகளுக்கு அவா்களை பயன்படுத்துவது இல்லை. தற்போது வெளியாகி உள்ள விடியோ காட்சிகளில் உள்ள நபா்கள் சிறைவாசிகள் தானா? என விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இந்த விடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல்லது பழைய விடியோ காட்சியா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றனா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க