செய்திகள் :

சிவகங்கையில் சிற்றுந்து சேவை! காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைத்தாா்

post image

சிவகங்கையில் புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிற்றுந்து அனுமதி சீட்டுக்கான ஆணைகளை பேருந்து உரிமையாளா்களிடம் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, 23,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. குக்கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து புதிய விரிவான சிற்றுந்துத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 20 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வந்த சிற்றுந்து சேவை 26 கி.மீ. தொலைவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதில் குறைந்தபட்ச பயணக் கட்டணமாக ரூ.4-ம், அதிகபட்சமாக ரூ. 11-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே. கருப்பண்ணன், நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கண்காணிப்பாளா் ஐ.தரேந்திரபூபதி, முன்னாள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மஞ்சுளா பாலசந்தா், சிற்றுந்து உரிமையாளா்கள் சங்கத்தினா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய பாரத எழுத்தறிவுத் தோ்வு: ஆா்வத்துடன் பங்கேற்ற முதியோா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 30 மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் நடத்திய இந்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு சாா்பாக, ஒலிம்பியாட் கொடி அறிமுக விழா, மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மர இழைப்பகத்தில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் உள்ள மர இழைப்பகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின. திருப்பத்தூா் தென்மாபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க