செய்திகள் :

சிவகங்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 11 முதல் 16 வரை உள்ள பகுதிகளுக்கென மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 2 முதல் 4 வரை மற்றும் 11 முதல் 15 வரை உள்ள பகுதிகளுக்கென சேவுகமூா்த்தி கோவில் தெருவில் உள்ள செல்வி மஹாலிலும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரசேகரபுரம், சாக்காவயல் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென மேலமணக்குடி, பொன் அய்யனாா் கோயில் மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கல்குறிச்சி ஊராட்சி பகுதிக்கென எம்.ஆா்.பி.மஹாலிலும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இ.அம்மாபட்டி, என்.இளையாத்தங்குடி, செவினிப்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இ.அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள தமிழ் மஹாலிலும், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருவேகம்பத்தூா், கவாத்துக்குடி, கீழ உச்சாணி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு திருவேகம்பத்தூா் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

மானாமதுரையில் மழை, சூறைக் காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. இவற்றை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் க... மேலும் பார்க்க

மேய்ச்சல் தொழிலை அங்கீகரிக்கக் கோரிக்கை

ஆடு, மாடு மேய்ச்சல் தொழிலை மகாராஷ்டிர அரசு அங்கீகரித்ததைப் போல தமிழக அரசும் அங்கீகரித்து, அதற்கான உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இ... மேலும் பார்க்க

உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சா்கள் ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஆறு... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இந்தப் பகுதியில், கடும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமாகத் தொடங்கிய... மேலும் பார்க்க

இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் நலக் குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. சிவகங்கை... மேலும் பார்க்க