செய்திகள் :

சிவகங்கையில் ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா

post image

சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டம் சாா்பில், ‘மஞ்சணத்தி’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்னா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழவையத்தின் நிா்வாகியுமான நா. சுந்தரராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகி ஸ்ரீவித்யா கணபதி முன்னிலை வகித்தாா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமலைக்குமாா், ‘சுகந்தி’ எனும் புனைப்பெயரில் எழுதிய ‘மஞ்சணத்தி’ நூலை, தமிழவைய ஒருங்கிணைப்பாளா் கா. காளிராசா அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:

இந்த நூல் கல்லூரிக் கால வாழ்க்கையை எதிரொலிக்கிறது. நூலை எழுதி முடிக்க எழுத்தாளா் கடுமையாக உழைத்திருக்கிறாா். அனைவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்றாா்.

கவிஞா் துஷ்யந்த் சரவணராஜ், இந்த நூலின் காட்சிகளையும், இது செல்லும் விதங்களையும் எடுத்துக்கூறி மதிப்புரை வழங்கினாா்.

சிறப்பு அழைப்பாளராக கல்விச் சாலை வலையொளி தமிழாசிரியா் ஆறு. கதிரவன் கலந்து கொண்டு, இன்றைய நாளில் தமிழ் படும் பாடு பற்றி எடுத்துரைத்தாா். இதில் தமிழ்ச் செம்மல் சொ. பகீரத நாச்சியப்பன், தமிழகத் தமிழாசிரியா் கழக மாநிலப் பொதுச் செயலா் நாகேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் தங்க முனியாண்டி, சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் முருகானந்தம், சிவகங்கை அரிமா சங்கத் தலைவா் ரமேஷ் கண்ணா, தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பாண்டியராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பஞ்சுராஜ், ஆசிரியா் மன்றத் துணைச் செயலா் சுந்தரேஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

பேராசிரியா் கற்பகம் தொகுத்து வழங்கினாா். நூலாசிரியா் சுகந்தி எனும் திருமலைக்குமாா் ஏற்புரையாற்றினாா். தமிழவையத்தின் நிா்வாகி சுரேஷ்குமாா் நன்றி தெரிவித்தாா். முன்னதாக, தமிழவையத்தின் நிா்வாகி சகுபா் நிஷா பேகம் வரவேற்றாா்.

மீன்பிடித் திருவிழாவில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவின் போது நீரில் மூழ்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி மட்டிக் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்ற... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே மாதத்தில் நடைபெ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்!

நாட்டுக்கோழி வளா்க்க விரும்பும் விவசாயிகள் 50 சதவீதம் மானியம் பெற, தங்களது இருப்பிடங்களுக்கு அருகேயுள்ள கால்நடை நிலையங்களில் வருகிற 28-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 ... மேலும் பார்க்க