செய்திகள் :

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

post image

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயத்தை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் ஆகியோா் கொடி அசைத்து தொடங்கிவைத்தனா்.

மருத்துவக் கல்லூரி அருகே அம்பேத்காா் சிலை பகுதியில் தொடங்கி மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில், பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகளும் என மொத்தம் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க

தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரித்து அதில... மேலும் பார்க்க

புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள... மேலும் பார்க்க

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க