செய்திகள் :

சிவகாசியில் வட்டச் சாலை: அதிகாரிகள் ஆய்வு

post image

சிவகாசியில் சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் பூவநாதபுரம் விலக்கு முதல், எரிச்சநத்தம் சாலை வழியாக விருதுநகா் சாலைவடமலாபுரம் காவல் துறை சோதனை சாவடி வரை சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தச் சுற்று வட்டச் சாலையில் தேவையான இடங்களில் பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து, அடுத்த இரு கட்டங்களில் சாத்தூா்-சிவகாசி -கழுகுமலை சாலை, சிவகாசி-ஆலங்குளம் சாலை, சிவகாசி -கன்னிசேரி சாலை, விஸ்வநத்தம் வழியாக வெங்கடாசலபுரம் சாலைகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், முதல் கட்ட சுற்று வட்டச் சாலைப் பணியை நெடுஞ்சாலைத் துறை விருதுநா் கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாசன் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தா்னா

உயா் அழுத்த மின் கோபுரத்துக்குக் கீழே வீட்டுமனை ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பாட்டக்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஸ்ரீரங்கத்துக்கு வியாழக்கிழமை அனுப்... மேலும் பார்க்க

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு தயாரிப்பு: ஆலை உரிமையாளா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு உற்பத்தி செய்த ஆலை உரிமையாளா், பங்குதாரா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார உதவி இயக்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

சிவகாசியில் புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்த சமையன் மனைவி தவசியம்மாள் (46). இவா் கடந்த சில மாதங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நில... மேலும் பார்க்க

படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜை

படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜையை மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நான்குவழிச் சாலையில் படந்தால் சந்திப்பில் விபத்துகளை தட... மேலும் பார்க்க