செய்திகள் :

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள். "சிவகாசி மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சாம் டேவிட் (வயது 30). இன்னும் திருமணமாகவில்லை. விருதுநகரில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் பொருட்காட்சிக்குப் பொழுதுபோக்காக வந்த பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் பகுதி நேரமாக வேலை செய்ய சாம் டேவிட்டிடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்.

அவரும், பொருட்காட்சி தொடர்பாக நோட்டீஸ் விளம்பரம் கொடுப்பது, டிக்கெட் கொடுப்பது மேலும் தனக்கு உதவியாக இருக்கும்படி சிறுவர்கள் இருவருக்கும் வேலை அளித்துள்ளார்.

காவல் நிலையம்

அத்துமீறல்

இந்தநிலையில் பொருட்காட்சி தொடர்பாக சிவகாசியில் விளம்பரம் செய்யவேண்டும் எனக்கூறி சிறுவர்கள் இருவரையும் சேம்டேவிட் சிவகாசிக்கு வரசொல்லியுள்ளார். அதன்படி சிவகாசிக்கு வந்த பள்ளி சிறுவர்கள் இருவரும் மருதுபாண்டியன் நகரில் உள்ள சாம்டேவிட் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, சிறுவர்களுக்கு இருவருக்கும் சாம் டேவிட் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். முன்னதாக, அந்த குளிர்பானத்தில் மயக்கமருந்து ஏதோ கலந்து தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குளிர்பானம் குடித்த சிறுவர்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே அரை மயக்கத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் படுக்கையறைக்கு அழைத்துச்சென்ற சாம்டேவிட், பள்ளி சிறுவர்களை பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுவர்களுக்கு மயக்கம் தெளிந்ததும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதையடுத்து பள்ளி சிறுவர்கள் இருவரும் தங்களுக்கு நடந்ததை வீட்டு பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, இதுதொடர்பாக சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க