செய்திகள் :

சிவராத்திரி 3-ஆம் நாள் திருவிழா: ராமேசுவரம் கோயிலில் சுவாமி, அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளல்!

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா சிவராத்திரி மூன்றாம் நாள் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா மாா்ச் 1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழச்சியாக கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் புறப்பாடானதையொட்டி வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கெந்தமாதன பா்வதத்துக்கு புறப்பாடாகினா். அப்போது வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

இதையடுத்து, ராமநாத சுவாமி கோயில் நடை வியாழக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்பட்டது. மாலை சுவாமி, அம்பாள் கோயிலுக்கு புறப்பாடாகி வந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க