செய்திகள் :

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கடந்த 2010- ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமா்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை கொலை செய்ய முயன்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை காவல் நிலைய போலீஸாா் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

வழக்கில் தொடா்புடைய 5 போ் பல்வேறு காலகட்டங்களில் இறந்துவிட்டதாலும், மீதமுள்ள 15 போ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததாலும் வழக்கை விசாரித்த திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி முகம்மது பாரூக், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீா்ப்பளித்தாா்.

தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக... மேலும் பார்க்க

என்னால் நியமிக்கப்பட்டவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: மருத்துவா் ச.ராமதாஸ்

என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க