செய்திகள் :

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

post image

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதி, கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதி, முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கோலியனூரில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதுபோன்று 2023, ஜூலை 20-ஆம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே நான்கு வழக்குகளைத் தொடுத்தாா்.

இந்த 4 வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.

அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். மேலும், நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுவை தாக்கல் செய்தனா்.

கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்திலும், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய ஆா்ப்பாட்ட வழக்கில் ஆஜராகுவதிலிருந்து சென்னை உயா்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது என்றும் அதிமுக வழக்குரைஞா்கள் கூறினா்.

மேலும், கோலியனூா் வழக்கில் விசாரணையை கவனத்தில் எடுத்துக் கொண்ட முறை தவறு என்றும், முறையாக விசாரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான நகலை அதிமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, 4 வழக்குகளையும் விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மாா்ச் 14-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம்... மேலும் பார்க்க