அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மாா்ச் 14-க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அப்போதைய கனிம வளத் துறை அமைச்சரும், தற்போதைய வனத் துறை அமைச்சருமான க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையின் போது ஒருவா் இறந்துவிட்டாா்.
இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா்ஆகிய நான்கு போ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவா் ஆஜராகவில்லை.
மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.அருள்மொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.