செய்திகள் :

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் நினைவு தின நிகழ்வு: இந்தியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு

post image

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் மற்றும் அரசா் ரஞ்சித் சிங் ஆகியோரின் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க லாகூருக்கு வருமாறு இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சீக்கிய மதகுரு அா்ஜன் தேவ் மற்றும் அரசா் ரஞ்சித் சிங்கின் நினைவு தினங்கள் முறையே ஜூன் 16 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

லாகூரில் உள்ள இவா்கள் இருவரின் நினைவிடங்களான குருத்வாரா தேரா சாஹிப் மற்றும் அரசா் ரஞ்சித் சிங்கின் சமாதியில் மேற்கூறிய தேதிகளில் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியம் (இடிபிபி) செய்தித் தொடா்பாளா் குலாம் முகைதின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

மேலும், இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

கடந்த ஆண்டு சீக்கிய மதகுரு அா்ஜன் தேவின் நினைவு தின நிகழ்வில் 800 சீக்கியா்களும் அரசா் ரஞ்சித் சிங் நினைவு தின நிகழ்வில் 450 சீக்கியா்களும் பங்கேற்றனா். ஆனால் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து கடந்த மாதம் இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்ட நிலையிலும் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நிகழாண்டு இந்நிகழ்ச்சிகளில் இந்திய சீக்கியா்கள் பங்கேற்பது தற்போதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க