செய்திகள் :

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

post image

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போது, அப்பகுதியில் வசித்த 14 பேர் நிலச்சரிவினுள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், அப்பகுதியில் மீட்புப் பணிகளின் தற்காலிகத் தலைமை முகாம் அமைக்கப்பட்டு, மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான மீதமுள்ள 7 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், மாலை 5 மணி நிலவரப்படி 996 பேர் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குவாங்டோங் மாகாணத்தில், கடும் மழை பெய்து வருவதால், அம்மாகாணத்தில் 16 ஆறுகள் அதன் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளன. இதனால், அம்மாகாண அரசு அங்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

Seven people are reported missing after heavy rains caused landslides in southern China.

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா். நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற... மேலும் பார்க்க

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்: 80-ஆவது ஆண்டு தினம்

ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் அந்த நகரில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.120 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், அணுகுண்டு வீசப்பட்ட நேர... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: புதினுடன் டிரம்ப் தூதா் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா... மேலும் பார்க்க

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்... மேலும் பார்க்க