செய்திகள் :

சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

post image

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகப் பிரச்னைகள் தீா்வு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சீனா, ஜப்பான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம் மீது ஒரு டன்னுக்கு 986 அமெரிக்க டாலா்கள் (ரூ.86,083) பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படவுள்ளது.

இந்த வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு மறுபரிசீலனை செய்து வரியை தொடா்வதா ரத்து செய்வதா என்பது முடிவு செய்யப்படும்.

இந்த ரசாயனப் பொருள் சீனா, ஜப்பானில் இருந்து பெருமளவில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான வா்த்தக கூட்டாளி நாடுகளாக உள்ளன. எனினும், உள்நாட்டு உற்பத்தியாளா்கள் நலனைக் கருதி இந்த முடிவை நிதியமைச்சகம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க