செய்திகள் :

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

post image

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றைய கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது' என்று பேசினார்.

அப்போது பேசுகையில் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார்.

"திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை" என்று பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவிட்ட நிலையில், திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தமிழக எம்பிக்கள் மனம் புண்பட்டிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்

புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேள... மேலும் பார்க்க

பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி

புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுச் செயலா் சுப்ரதா குப்தா

கொல்கத்தா: சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறைச் செயலா் சுப்ரதா குப்தா தெரிவித்தாா். இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைந... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின. மத... மேலும் பார்க்க