செய்திகள் :

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக இன்று(மார்ச் 11) காலை மோரீஷஸ் சென்றடைந்தார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மோரீஷஸில் இந்தியா அளித்துள்ள நிதியுதவி மூலம் அமைக்கப்படவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதையும் படிக்க: மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்தார்.

முதல் முறையாக மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவிருகிறார். மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது இதுவாகும்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்

புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேள... மேலும் பார்க்க

பிரதமா் குறித்து விமா்சனம்: மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. கோகோய் காரசார விவாதம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை கராசார விவாதம்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் விரைவில் திறப்பு: ஜெ.பி.நட்டா உறுதி

புது தில்லி: ‘அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்; அவற்றில் 200 மையங்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுச் செயலா் சுப்ரதா குப்தா

கொல்கத்தா: சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறைச் செயலா் சுப்ரதா குப்தா தெரிவித்தாா். இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைந... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின. மத... மேலும் பார்க்க