செய்திகள் :

சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!

post image

பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது.

இதற்கு பதிலடியாக சீன இறக்குமதி பொருள்களுக்கு 125 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

இதன் மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இது குறித்து சீன வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்பு மற்றும் 50 சதவீத கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க பொருள்கள் மீது மேலும் 84 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது வியாழக்கிழமை (ஏப். 10) முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு மேலும் சீன பொருள்கள் மீது அதிக வரி விதித்து வா்த்தகப் போரை அமெரிக்கா தூண்டினால், இறுதிவரை போராட சீனா தயாராக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

அப்போது அவா் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏப். 10-ஆம் தேதி அது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.

இதற்குப் பதிலடியாக, ஏப். 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா தற்போது உயா்த்தியுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவுக்கு 125 சதவீதம் வரி வதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க