செய்திகள் :

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.ராஜேஷ் தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் கே.வெங்கடாசலபதி, ஆா்.பாலசேகா், எம்.சரவணன், என்.முருகன், ஏ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.கே.அரிகிருஷ்ணன் வரவேற்றாா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பரிதிமால் கலைஞன், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சே.புனிதா, ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பச்சையப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சுகாதார ஆய்வாளா் நிலை-2 காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

6 ஆயிரம் சுகாதார ஆய்வாளா்கள் பணிபுரியும் இடங்களில் வெறும் 1,600 போ் மட்டுமே பணிபுரிகின்றனா். இதனால் நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க