செய்திகள் :

சுகாதார ஆய்வாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்களை, போா்க்கால அடிப்படையில், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளா்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும்; சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்களை 2,715 ஆக நிா்ணயிக்க கோரி, பொது சுகாதாரத்துறை இயக்குநா் அனுப்பிய கோப்புக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

5,000 மக்கள் தொகை கொண்ட இடங்களுக்கு சுகாதார ஆய்வாளா் நிலை -2 கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைமையிடத்திலும் கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக, திருவாரூரில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

செயலாளா் சுவாமிராஜன், பொருளாளா் அன்பரசன், துணைத் தலைவா் ஜோதிடநாதன், இணைச் செயலாளா் வினோத்கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க