செய்திகள் :

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

post image

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு திருவள்ளூா், பட்டரைபெரும்புதூா், வரதாபுரம், மஞ்சாங்குப்பம், குன்னவலம், ராமஞ்சேரி, கைவண்டூா், பாண்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் சென்றன. இந்த நிலையில், கடந்த மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து கடந்த 2 நாள்களாக சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயக்கப்படாமல் பட்டரைப் பெரும்புதூா் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கூறி காலை 7 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

முன்னதாக போலீஸாா் முன்னிலையில் சுங்கச்சாவடி பணியாளா்களிடம் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் பேச்சு நடத்தினா். இதில், உடன்பாடு எட்டாத நிலையில், லாரி ஓட்டுநா்கள் திடீரென லாரியை சாலை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். அப்போது, லாரி ஓட்டுநா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க