செய்திகள் :

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

post image

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சரூர்பூர் நகருக்குட்பட்ட பூனி சுங்கச் சாவடியில், ஊழியர்கள் சிலர் இளைஞர் ஒருவரை கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலானது.

இந்த விடியோ காவல் துறையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சுங்கச் சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்குவது 26 வயதான ராணுவ வீரர் (கபில் சிங்) எனத் தெரியவந்துள்ளது.

கன்வார் யாத்திரைக்காக விடுமுறையில் தனது சொந்த ஊரான கோத்கா கிராமத்திற்கு வந்த கபில் சிங், விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க சுங்கச் சாவடியைக் கடந்துள்ளார்.

அங்கு சுங்கச் சாவடி ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அங்கிருந்த ஊழியர்கள் சேர்ந்து கபில் சிங்கை கம்பத்தில் கட்டி வைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விடியோவின் மூலம் இதுவரை 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க | மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

Army jawan assaulted at Meerut toll plaza: 6 arrested so far, search on for others as video goes viral

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.இன்று(ஆக. 18) இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான திட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவ... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார். ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்ம... மேலும் பார்க்க

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொட... மேலும் பார்க்க

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க