செய்திகள் :

"திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அப்படி பேசவில்லை" - வன்னி அரசு விளக்கம்!

post image

13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தியது திமுக அரசு.

இதையடுத்து தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்தால் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சலுகைகள் பல வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், பணிநிரந்தரம் வேண்டும், தனியார்மயம் வேண்டாம் என்பதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையாக உறுதியாக நிற்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்த வண்ணமிருக்கின்றன.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது

இதுகுறித்து தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “குப்பை அள்ளுகிறவர்களை பணி நிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்களே செய்து கொண்டிருங்கள் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. சாக்கடையை சுத்தம் செய்கிறவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும் என்கிற கருத்துக்கு இது வலுச் சேர்ப்பதாக இருக்கிறது.

இதைப் போய் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களிடம் சொன்னால், அவர்களுக்கு எதிராக நாம் பேசுகிறோம் என்று கருதுவார்கள். அதனால் தான் நாமும் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்ல நேர்ந்தது. அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று சொல்வது தான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பையை அள்ள வேண்டுமா?" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராடிவரும் சமயத்தில் திருமாவளவன் இப்படி பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்திருக்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ``தூய்மைப் பணியாளர்களில் 90 சதவீதத்தினர் குறிப்பிட்ட தலித் சமூகத்தை சார்ந்தவர்கள்தான் அவர்கள் மட்டுமே தொடர்ந்து இப்பணியில் தொடரவேண்டுமா?

தனது கர்மா யோகி நூலில், ‘தூய்மைப் பணி, கடவுளுக்கு செய்யும் தொண்டு' என்றார் பிரதமர் மோடி; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அப்பதவிக்கு அறிவிக்கப்பட்டவுடன் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டதை பெருமையாக பகிர்ந்தார். இந்த கர்மாவைத்தான் விசிக எதிர்க்கிறது எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக் கூடாது என்பதே விசிக-வின் தொலைநோக்கு பார்வை. இதுதான் இடதுசாரி பார்வை திருமாவளவனின் இந்த சமூகநீதிப்பார்வை இந்தியா முழுக்க விரைவில் எதிரொலிக்கும்.

சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்து' "தூய்மை பணிக்கு விரும்பி யாரும் வரவில்லை. அது காலங்காலமாக திணிக்கப்பட்ட வன்கொடுமை; காலங்காலமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே தூய்மைப் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்துதான் அது” என்று பேசியிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது… அதுதான் சமூகநீதி’ - திருமாவளவன் சொல்வதென்ன?

'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது.. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம்' என தனது பிறந்தநாள் உரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது க... மேலும் பார்க்க

"சேகர் பாபு டைரக்ஷன்; அந்தக் கூலியும் Flop, இந்தக் கூலியும் Flop" - சீமான் கலகல விமர்சனம்!

13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அடவடித்தனமாக அப்புறப்படுத்தியது திமுக அரசு. ... மேலும் பார்க்க

ஐ.பெரியசாமி ED ரெய்டு: "இந்த அமலாக்கத்துறை ரெய்டெல்லாம் வெறும் ஏமாற்று வேலைதான்!" - சீமான்

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோ... மேலும் பார்க்க

"ED-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம்... சட்டபடி எதிர்கொள்வோம்!" -திமுக R.S பாரதி அறிக்கை

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோ... மேலும் பார்க்க

Today Roundup: மோடி சுதந்திர தின உரை டு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை| 15.8.2025

நேற்றைய நாளின் (ஆகஸ்ட் 15) முக்கியச் செய்திகள்!*நேற்றைய 79-வது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி 103 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் பிஜேபி-யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்" - இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்க... மேலும் பார்க்க