செய்திகள் :

"தமிழ்நாட்டில் பிஜேபி-யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்" - இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி

post image

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். 

திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி, பாஜகவில் முழுநேர அரசியல்வாதியாகப் பணியாற்றி, கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வகித்து, மணிப்பூர், மேற்கு வங்கம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக் கூடியவர். 

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் காலமானார். அவரது திடீர் இறப்பிற்கு உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

இல.கணேசன்: `அரசு ஊழியர் டு மணிப்பூர் ஆளுநர்' - அரசியல் பயணம் ஒரு பார்வை!

இந்நிலையில் இல.கணேசன் காலமானதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். தமிழ்நாடு முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி." என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர்.

அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். ஐயா திரு. இல. கணேசன் அவர்கள் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "நாகாலாந்து ஆளுநர் மரியாதைக்குரிய இல கணேசன் அவர்கள் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது தேசப்பற்றாளரான அவர் சுதந்திர தின அன்று மறைந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது தேசப்பற்று தெய்வப்பற்று தமிழ் பற்று மிகுந்தவர் அரசியலில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் பரிமளித்தவர் பாஜகவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்.

ஆர்.எஸ்.எஸி ல் தொண்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று ஆளுநராக தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்தவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் உருவாக்கியவர். பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல இலக்கியவாதிகளுக்கு பக்க பலமாக இருந்தவர் அதில் அரசியலில் அவருக்கு நிர்வாகியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பிலும் அவரோடு நிர்வாகியாக பணியாற்றும் பாக்கியம் பெற்றவள் கட்சியில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் வழி வகுத்தவர் அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு அவரை இழந்து வாடும் அவர் உறவினர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"எனது உரையை அவரது இதழில் வெளியிட்டவர்" - இல.கணேசன் குறித்து திருமா உருக்கம்

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்க... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் காலமானார்! `அரசு ஊழியர் - பாஜக- ஆளுநர்' அவரது அரசியல் வாழ்க்கைப் பயணம்!

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் தனது 80வது வயதில் இன்று மாலை காலமானார்.பாஜகவில் மூத்த தலைவரான இல.கணேசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது தலையில் அடிபட்டு, மர... மேலும் பார்க்க

`நாய் கடித்ததும் சோப்பு வைத்து கழுவினாலே ரேபிஸ் வைரஸ் இறந்துவிடும்'- அம்பிகா சுக்லா சர்ச்சை கருத்து

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்று... மேலும் பார்க்க

சித்தர்காடு: அரிசி ஆலையால் இன்னல்படும் மக்கள்; காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு - என்ன நடக்கிறது?!

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலை 1972 ல் தொடங்கபட்டது. இம்மாவட்டம் டெல்டா சார்ந்த பகுதி என்பதால் அரிசி ஆலை அவ்விடத்தில் அமைவு பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியில் இ... மேலும் பார்க்க

China: சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்; இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல் என்ன?

பிரமாண்டமான ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது. இது, சீனாவின் மிகப்பெரிய கனவு ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஹோடானை, தன் கட்டுப... மேலும் பார்க்க