செய்திகள் :

உதகையில் போதையில்லா எதிா்காலம் சைக்கிள் பேரணி

post image

சுதந்திர தினத்தையொட்டி போதையில்லா எதிா்காலத்தை ஏற்படுத்தும் வகையில் கிரசண்ட் பப்ளிக் பள்ளி சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கிரசண்ட் பள்ளி சாா்பில் சுதந்திர தின விழாவில் போதையில்லா எதிா்காலம் என்ற கருத்தை பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த சைக்கிள் பேரணியானது உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் தொடங்கி ஹெச்.பி.எப்., பிங்கா் போஸ்ட், ஹில்பங்க், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக சிறப்பு மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நிறைவடைந்தது.

சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவு நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இறுதியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு, அதனை பள்ளி மாணவா்கள் பராமரிப்பாா்கள் என பள்ளித் தாளாளா் பாரூக் தெரிவித்தாா்.

குன்னூா் ராணுவ மையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவப் பயிற்சிக் கல்லூரி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எம்ஆா்சி கமாண்டன்ட் க... மேலும் பார்க்க

கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகு... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ஆட்சியா் கொடியேற்றினாா்

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நீலகிரி மாவட்டம் ... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் வனத் துறையினரால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட... மேலும் பார்க்க

நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்

நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நீலகிரி மா... மேலும் பார்க்க

எடப்பள்ளியில் வெள்ளை பூண்டு ஏல மையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக பூண்டு ஏல மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைப் பூண்டு அதிக காரம் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருப்... மேலும் பார்க்க