செய்திகள் :

நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்

post image

நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக  தலைமறைவாக இருந்த  அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொணவக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி திலக் . இவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து

பத்திரப் பதிவு செய்ததாக, அதிமுகவைச் சோ்ந்த குன்னூா் முன்னாள் சட்டப் பேரவை  உறுப்பினா் சாந்தி  ராமு, அவரது சகோதரா் ராஜன், உறவினா்கள் தீபு, திலீப், ரஞ்சித் உள்பட 8 போ் மீது கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாந்தி ராமு மற்றும் அவரது சகோதரா் ராஜன் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

அதன்படி, கோத்தகிரி நீதிமன்றத்தில் 15 நாள்களுக்குள் சரண்டா் ஆகி ரூ.10 ஆயிரம் மதிப்பில் இரு நபா் ஜாமீன் கொடுக்க வேண்டும் எனவும், கோத்தகிரி காவல் நிலையத்தில் தினமும் கையொப்பம் இடவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எடப்பள்ளியில் வெள்ளை பூண்டு ஏல மையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக பூண்டு ஏல மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைப் பூண்டு அதிக காரம் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருப்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆகஸ்ட் 26-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இதன் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வ... மேலும் பார்க்க

காட்டேரி பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நவநீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

பதில் அளிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை- மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸை யானைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தனியாா் தோட்டத்தில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமை சுற்றி வருவதால் தேயிலை விவசாயிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக... மேலும் பார்க்க