செய்திகள் :

‘உலக பிரச்னைகளின் தீா்வுக்கு இந்தியா தீவிர பங்கு’: ரஷிய அதிபா் புதின் பாராட்டு

post image

சா்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது’ என்று ரஷிய அதிபா் புதின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபா் புதின், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உள்ளிட்ட உலக தலைவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூா், நேபாளம், ஆஸ்திரேலியா, ஈரான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் வாழ்த்துகள் தெரிவித்தனா். தலைவா்களின் வாழ்த்துச் செய்திகள் பின்வருமாறு:

ரஷிய அதிபா் புதின்: உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகச் சரியான செல்வாக்கு கிடைத்துள்ளது. சா்வதேச அளவில் மிக முக்கியமான விஷயங்களில் தீா்வுக் காண இந்தியா தீவிரமாக பங்களிக்கிறது.

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான சிறப்பு வாய்ந்த மற்றும் முக்கியமான உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ரஷியா உறுதியுடன் இருக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடா்ந்து மேம்படுத்த முடியும். நமது நட்புறவு கொண்ட மக்களின் நலன்களுக்கு இந்த ஒத்துழைப்பு உதவும். மேலும், நமது பிராந்தியத்திலும், உலகெங்கிலும் பாதுகாப்பையும் அமைதியையும் வலுப்படுத்தும்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்: இந்திய மக்களுக்கு எனது மனமாா்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். 2047 மற்றும் அதற்கு அப்பாலும் நமது உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளேன்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு: எனது அன்பு நண்பா் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். பெருமைமிக்க ஜனநாயகங்களான நமது இரு நாடுகளுக்கு இடையே வரலாறு, புத்தாக்கம் மற்றும் நட்பு ஆகியவை வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளன. நாம் இருவரும் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். நமது நட்புறவின் இன்னும் சிறப்பான தருணங்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ: அமெரிக்காவின் சாா்பில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்டது.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், இன்றைய நவீன சவால்களை எதிா்கொண்டு, இரு நாடுகளுக்கும் சிறந்த எதிா்காலத்தை உறுதி செய்ய முடியும். அமைதி, வளம், மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான நமது பொதுவான இலக்கு, இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது.

மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டுறவு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களின் எல்லைகளை விரிவுபடுத்தி, விண்வெளி வரையிலும் நீண்டுள்ளது.

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகித... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அ... மேலும் பார்க்க

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

அலாஸ்கா: உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டிரம்ப் கூறிய நிலையில், ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது என புதின் குறிப்பிட்டிருக்கிறார்.உக்ரைன் மீதான போரை நி... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சு... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா். ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்த... மேலும் பார்க்க