செய்திகள் :

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

post image

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீது போர் நிறுத்தத்துக்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனல், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஒன்றுபோல இரு தலைவர்களும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பதை மட்டுமே அறிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நாடுகளாக இருக்கும் அமெரிக்க - ரஷிய அதிபர்கள் ஒன்றாக சந்தித்துப் பேசிக்கொண்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசும்போது இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டே, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே தெரிவித்திருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின் இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் கூட்டத்தில் நடந்த விவகாரங்கள் குறித்து அவர்களது அறிக்கைகைளை வாசித்துவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டனர்.

அதிபர்கள் பதிலளிக்காத நிலையில், இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களும் செய்தியாளர்களை புறக்கணித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறும் என்று அறிவித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஸ்கோ வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்திருந்தார்.

உலகின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் பேச்சுவார்த்தை, மிகவும் அரிதிலும் அரிதாக நடந்திருந்த போதிலும், எந்த முக்கிய முடிவுகளும் எட்டப்படாமல் போயிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Trump leaves Alaska summit with Putin empty-handed after failing to reach a deal to end Ukraine war

இதையும் படிக்க.. சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையட... மேலும் பார்க்க

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகித... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அ... மேலும் பார்க்க

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

அலாஸ்கா: உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டிரம்ப் கூறிய நிலையில், ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது என புதின் குறிப்பிட்டிருக்கிறார்.உக்ரைன் மீதான போரை நி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா். ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்த... மேலும் பார்க்க