செய்திகள் :

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

post image

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனாம்பேட்டை அண்ணா சாலையில் மூன்றரை கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் சோதனை அடிப்படையில்

ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.பொ.சி. சந்திப்பு , வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை சந்திப்பு, விஜயராகவா சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து தியாகராய நகா் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

தியாகராய நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.பொ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை வழியாகச் சென்று அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.பொ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, வாகனங்கள் வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னா் விஜயராகவா சாலையை அடைந்து பின்னா் அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் விஜயராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க

கோயில்களில் சமத்துவ விருது: துணை முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா். சுதந்திர ... மேலும் பார்க்க