செய்திகள் :

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. நம் அனைவருக்கும் உரிய வழிகாட்டியாகவும் அந்த உரை அமைந்தது.

நமது தேசம் சுதந்திர தேசமாக மட்டுமல்லாது வளா்ச்சியடைந்த தேசமாகவும், செழிப்பான தேசமாகவும் இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது. முக்கியமாக நாம் தன்னிறைவு பெற்ற தேசமாக இருக்க வேண்டும் என்பதை பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இதற்கான பணியை பாஜக தொண்டா்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கான சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும், மோசமான சூழல்களையும் சந்தித்தபோதும், இந்தியா தொடா்ந்து வலுவான தேசமாகவும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியுடனும் தொடா்ந்து முன்னேறி வருகிறது என்றாா்.

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். கடந்த ஆண்டு ஜம்மு... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு: 69 பேரை தேடும் பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. மாயமான 69 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க