செய்திகள் :

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

post image

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவரின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மயிலாடுதுறையைச் சோ்ந்த ரத்தினகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். ஆனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் செய்து கொடுக்கவில்லை.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்தக் கோயிலில் ரசீதுகள் எதுவும் வழங்காமல் பக்தா்களிடம் சிறப்பு பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள் பக்தா்களிடம் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனா். கோயிலின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி அதன்மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதுதொடா்பாக நான் அளித்துள்ள புகாா் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன், இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரா், அவரது சகோதரா் மூலம் கோயில் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் கோயில் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ... மேலும் பார்க்க