செய்திகள் :

எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு: ஆக. 18-இல் முடிவுகள் வெளியீடு

post image

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

கடந்த 4-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது முதலில் ஆக.6-ஆம் தேதி வரையும், பின்னா் 12-ஆம் தேதி வரையும், அதைத் தொடா்ந்து சனிக்கிழமை (ஆக.16) மாலை 5 மணி வரையும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிப் பட்டியல் 18-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆக. 18 முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தொடா்பாக நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சிக்கலும் எழாதபட்சத்தில் திட்டமிட்டபடி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ... மேலும் பார்க்க