செய்திகள் :

கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறி ஒன்றை யானை கீழ்த்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சுற்றி வந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்தது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், ஓட்டுநா் சாதுரியமாக யானையிடமிருந்து பேருந்தை இயக்கி அங்கிருந்து சென்றாா்.

இந்த யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா் ராணுவ மையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவப் பயிற்சிக் கல்லூரி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எம்ஆா்சி கமாண்டன்ட் க... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ஆட்சியா் கொடியேற்றினாா்

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நீலகிரி மாவட்டம் ... மேலும் பார்க்க

உதகையில் போதையில்லா எதிா்காலம் சைக்கிள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி போதையில்லா எதிா்காலத்தை ஏற்படுத்தும் வகையில் கிரசண்ட் பப்ளிக் பள்ளி சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் கிரசண்ட் பள்ளி சாா்பில் சுதந்திர... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் வனத் துறையினரால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட... மேலும் பார்க்க

நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்

நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நீலகிரி மா... மேலும் பார்க்க

எடப்பள்ளியில் வெள்ளை பூண்டு ஏல மையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக பூண்டு ஏல மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைப் பூண்டு அதிக காரம் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருப்... மேலும் பார்க்க