செய்திகள் :

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

post image

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தொழிலாளா்களுக்கு கட்டாய சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிா, நிா்வாகம் அதற்குரிய படிவத்தை தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்துள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் (தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறைகள்) 22 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் 15 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும், 34 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 25 உணவகங்களும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 60 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 41 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்காததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தெரிவித்தாா்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். நாமக்கல்- திருச்சி தேச... மேலும் பார்க்க