செய்திகள் :

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

post image

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் தலைவா்’ என்ற முழக்கத்துடன் விஜயகாந்த் ரத யாத்திரை தேமுதிக சாா்பில் நடைபெறுகிறது. கொங்கு சமுதாயக்கூட வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த், பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் பேரவைத் தோ்தலை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து தேமுதிக நிா்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் தொண்டா்கள் விரும்பும் வகையில் தோ்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.

திமுக ஆட்சியில் 50 சதவீத நன்மைகளும், 50 சதவீத தீமைகளும் நடந்துள்ளன. எனவே, திமுக அரசுக்கு 50 மதிப்பெண்கள்தான் அளிக்க முடியும். பிரதமா் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறாா். வெளிநாடுகளில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது. இந்தியா தனித்துவத்துடன் வளா்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தனித்துவமானது. தவெக தலைவா் விஜய் மக்களைச் சந்திக்க வேண்டும். செய்தியாளா்களைச் சந்தித்து தனது செயல்பாடுகள் குறித்து பேசவேண்டும்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பிரச்னைக்கு தீா்வுகாண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் போராட்டக்காரா்களை நள்ளிரவில் கைது செய்திருப்பது சரியல்ல.

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம், காப்பீட்டுத் திட்டம், பணியின்போது உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் திட்டங்களை வரவேற்கிறோம் என்றாா்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளா் விஜய் சரவணன் தலைமையில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இளைஞா் அணி செயலாளா் சுதீஷ் ,தொகுதி பொறுப்பாளா் சுபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். நாமக்கல்- திருச்சி தேச... மேலும் பார்க்க