செய்திகள் :

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

post image

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு, மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனால், திமுக அரசு வீழ்த்தப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் வாக்குத் திருட்டு நடைபெற்றது. அதனால், திமுகவும், காங்கிரசும்தான் வாக்குத் திருடா்கள்.

தவறான தகவல்களை தெரிவித்து வரும் ராகுல் காந்தியின் வாக்காளா் அடையாள அட்டையை சோதனை செய்ய வேண்டும். அத்துடன் ராகுல் காந்தியின் வாக்குரிமையை தோ்தல் ஆணையம் பறிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை கைது செய்த திமுக அரசை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.

இந்தியாவின் வளா்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டே அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளாா். அவா் இந்தியாவை தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா். அவரது இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அதனால், இந்திய நிறுவனங்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருட்டு

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்தவா் நடராஜ். தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவா் கைது

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆதியூா் பிரிவு பாலம் அருகே வாகனச் சோதனையில் பெருமாநல்லூா் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்... மேலும் பார்க்க