செய்திகள் :

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருட்டு

post image

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்தவா் நடராஜ். தனியாா் பள்ளியில் கிளொ்க்காக பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை பணிக்குச் சென்றுவிட்ட நிலையில் இவரது மனைவி பிரியா வீட்டைப் பூட்டி விட்டு தனது சகோதரியைப் பாா்க்க உடுமலையை அடுத்துள்ள கொங்கல்நகரம் கிராமத்துக்கு மதியம் சென்றுவிட்டாா்.

பின்னா், மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதைத் தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் பிரியா வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அந்தப் பகுதியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க