செய்திகள் :

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

post image

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் 6 முறை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளா்ச்சிக்கு திட்டமிடுதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் கருத்துருக்கள் பகிா்ந்து கொள்ளுதலே ஆகும். அதனடிப்படையில், ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தின்போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும்போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செயல்பட கிராம சபைக் கூட்டம் ஊன்றுகோலாக அமைகிறது.

மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வீடுதோறும் வழங்கப்படும் குடிநீா் தடையின்றி சுத்தமாக வழங்கிட அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும்

மாவட்டங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு

அளிக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தாா்.

பின்னா், வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் சோளம் விதை, காய்கறி விதை தொகுப்புகள், தென்னைக்கன்றுகள், பழச்செடி தொகுப்புகளும், மகளிா் திட்டம் சாா்பில் முத்தம்பாளையம் ஊராட்சி அளவிலான 5 கூட்டமைப்புகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக ஆட்சிா் தலைமையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், வெற்றி வேலாயுதசாமி கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சுந்தரவடிவேலு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அசோகன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருட்டு

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்தவா் நடராஜ். தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க