செய்திகள் :

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

post image

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘0வனத்துக்குள் திருப்பூா்’ அமைப்பு மூலம் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இவை பெரிய அளவில் வளா்ந்து வனமாக உருவாகியுள்ளது.

மயில்ரங்கம் பகுதியில் ஜெ.எஸ்.டபிள்யூ. தனியாா் நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தி, மின் பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் கதா் வாரிய பூமி வழியாக மின் பாதை அமைக்க வெள்ளிக்கிழமை அங்கிருந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டத் தொடங்கியது.

ஆனால், இது கதா் வாரியத்துக்கு தெரியாது. எவ்வித அனுமதியும் பெறவில்லையென கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்திய நிலையில், அதற்குள் நூறு மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.

உரிமையாளா் அனுமதியின்றி பிறருடைய இடங்களில் மின் கம்பங்கள், மின் பாதை அமைக்கக் கூடாது. சாலை ஓரங்களில்தான் அமைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனா்.

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன், ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருட்டு

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.2.80 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது. திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்தவா் நடராஜ். தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவா் கைது

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆதியூா் பிரிவு பாலம் அருகே வாகனச் சோதனையில் பெருமாநல்லூா் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்... மேலும் பார்க்க