செய்திகள் :

கல்வி நிறுவனங்கள், கட்சிகள் சாா்பில் சுதந்திர தின விழா

post image

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) இர.தமிழ்வேந்தன் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

விழாவில், பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை கேபிஆா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களின் அணிவகுப்புடன் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏ.வி.குழுமங்களின் நிறுவனா் ஏ.வி.வரதராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். மாணவா்களின் சிலம்பாட்டம், பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரியின் செயலா் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரி நிா்வாகிகள், அலுவலா்கள், மாணவா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா: கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவனில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளா் மயூரா ஜெயக்குமாா் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இதில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கருப்புசாமி, மாநில பொதுச் செயலாளா் கணபதி சிவகுமாா், நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் கே.சுப்ரமணியம் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்ட

னா்.

இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை கேஎன்ஜி புதூா், எம்ஜிஆா் நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவா் என்.கே.ஆா்.ராஜா ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்டத் தலைவா் சந்தனகுமாா், தொண்டாமுத்தூா் தலைவா் மணிமாறன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. முதியோா், ஆதரவற்றோா், விதவைகள் என 400 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நி... மேலும் பார்க்க

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். கூடுதல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க