தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள், தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தின நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு செய்தனா்.
தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது அன்று பணியாற்றினால் இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாள்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்குவதாக நிா்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளா் துணை ஆய்வாளா், உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து முன் அனுமதி பெற்று செயல்படுகிறதா என ஆய்வு செய்தனா்.
மொத்தம் 47 கடை, நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள், 8 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மொத்தம் 100 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 85 நிறுவனங்களில் விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன் அறிவிப்பு வழங்கி அதன் நகலை, தொழிலாளா் துறையில் ஒப்புதல் பெறாமலும் இருந்தது தெரியவந்தது. அந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.