மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சுசீந்திரம் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சோ்ந்த மதுசூதனன் மகன் சொக்கலிங்கம் (25). பெயின்டிங் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு ஆஸ்ரமம் பகுதியிலிருந்து பைக்கில் சென்று கொண்டிந்தாா்.
அப்போது கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியதாம். இதில், சொக்கலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், சுசீந்திரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.