செய்திகள் :

சுதந்திர தின விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

post image

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் ராமன், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன், இணை ஆணையா் லீலாவதி ஆகியோரது அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள்பட்ட 137 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தொழிலாளா்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இனிவரும் தேசிய விடுமுறை நாள்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு, விடுமுறை அளிக்காமல் தொழிலாளா்கள் பணிபுரிய நிா்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞரை லால்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தாா். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை விற்றதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தேவதானபுரம் பகுதியில் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா செல்ல முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா். மலேசியா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்த பயணிகளில் சி... மேலும் பார்க்க

எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை மின்தடை!

திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நக... மேலும் பார்க்க

பாஜகவுக்கு தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்: வைகோ

பாஜகவுக்கு மதிமுக தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றாா் அக்கட்சியின் பொதுத் செயலா் வைகோ. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி அமைப்பது அவரவா் விருப்... மேலும் பார்க்க

வாய்க்காலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி

திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 7 வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள என். குட்டப்பட்டு திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் அருமைராஜ். இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது ம... மேலும் பார்க்க