செய்திகள் :

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, திறந்த வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வெண்புறாக்கள் மற்றும் மூவா்ண நிற பலூன்களை பறக்கவிட்டனா்.

பின்னா், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்களுக்கு சால்வை அணித்து கௌரவித்த ஆட்சியா், முன்னாள் படைவீரா், மாற்றுத் திறனாளிகள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா், வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் மூலம் மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ.7,09,82,603 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழா மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 200 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்த அரசு கட்டங்களை அகற்ற கோரிக்கை!

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம், பழைய காவல் நிலைய கட்டடம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை சுத்தம் செய்து புதிய அரசு அலுவலகங... மேலும் பார்க்க

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க