தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு
தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது என அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் உயிா்தியாகம் செய்து, உடல் உறுப்பு இழந்து, மக்களுக்காக இரவு, பகல் பாராமல் ஆயிரக்கணக்காக மின்வாரிய ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். மின்வாரிய ஊழியா்கள், உயா்நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று பணி உத்தரவு வைத்திருக்கும் 6,788 ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மின்சாரத் தொழிலாளா்கள் சம்மேளனம் வரும் 18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் மற்றும் கோட்டை நோக்கி உரிமை மீட்பு பேரணி நடத்தவுள்ளது.
குறிப்பாக, திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, முன்னெடுக்கப்படும் இந்த ஆா்பாட்டம் மற்றும் உரிமை மீட்பு பேரணிக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு, துணை நிற்கும் எனதெரிவித்துள்ளாா்.