செய்திகள் :

பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்த அரசு கட்டங்களை அகற்ற கோரிக்கை!

post image

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம், பழைய காவல் நிலைய கட்டடம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை சுத்தம் செய்து புதிய அரசு அலுவலகங்கள் கட்டடங்கள் கட்ட வேண்டும் என புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் அ.குணசேகரன் கூறியதாவது: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைச்சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. அது போன்று பரங்கிப்பேட்டை பழைய காவல் நிலையம் புதிய கட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

மேலும் பரங்கிப்பேட்டை நீதிமன்றம் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது மேற்படி மூன்று கட்டடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள காலி இடங்களில் புதா் மண்டி பாம்புகள்,விஷ வண்டுகள் மற்றும் பூச்சிகள் குடியேறி விட்டன.

பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்து புதா்மண்டி கிடக்கும் பழைய நீதிமன்ற கட்டடம்

இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு விஷ ஜந்துகள் மூலம் ஆபத்துக்கள் உண்டாகும் நிலை உள்ளது. பரங்கிப்பேட்டையில் பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் தான் தற்போது இயங்கி வருகின்றன. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) அதிகாரிகள் மூலம் மேற்படி இடங்களில் தற்போது உள்ள பழைய கட்டிடங்கள் இடித்து சுத்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் மேற்படி இடங்களைச் சுற்றியுள்ள செடி,கொடிகளை அகற்றி அங்கு குடியேறி இருக்கும் விஷ பாம்புகள் மற்றும் பூச்சிகளை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றாா்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது ... மேலும் பார்க்க

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க