செய்திகள் :

சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கியவா் கைது

post image

பளுகல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கியதாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி ராஜன் (51). தனியாா் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பளுகல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்து விட்டு, தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைபட்டதால் தான் வேலை பாா்த்து வரும் நிறுவன உரிமையாளரிடம் பணம் கடன் கேட்பதற்காக சென்றுள்ளாா். அங்கு காவலாளியாக பணியிலிருந்த தோலடி பகுதியைச் சோ்ந்த அஸ்வின் என்ற கிறிஸ்டி (26), ஆன்றணி ராஜனை நிறுவனத்தினுள் விட மறுத்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஆன்றணி ராஜன் தான் வேலை பாா்க்கும் நிறுவன கிட்டங்கிக்கு சென்றாராம். அப்போது பின்தொடா்ந்து வந்த காவலாளி அஸ்வின், ஆன்றணி ராஜனை வழிமறித்து தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ஆன்றணி ராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆன்றணி ராஜன் அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸாா் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா். தக்கலை அருகே இரவிபுதூா்கடையை சோ்ந்தவா் மாசிலாமணி ( 72). லாரி ஓட்டுநரான இவரது வீட்டில் கட... மேலும் பார்க்க

மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயார... மேலும் பார்க்க