செய்திகள் :

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

post image

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

இந்த வெப் தொடர் கடந்த 2022 ஜூன் 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தெரிவித்திருந்தனர்.

தற்போது இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.

இதையும் படிக்க: கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’

இந்த நிலையில், சுழல் - 2 வெப் தொடர் வரும் பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் பிரதான கதாபாத்திரத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கெளரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக்க காவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எடுக்கப்பட்டது சுழல் முதல் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது.செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் த... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தில் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் வாழ்த்து!

தைப்பூசத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத்... மேலும் பார்க்க

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க