செய்திகள் :

சூதாட்ட செயலி முறைகேடு வழக்கு -சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

post image

மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலியால் முறைகேடாக ரூ.6,000 கோடி ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.

சத்தீஸ்கரின் ராய்பூா், பிலாய் ஆகிய நகரங்களில் உள்ள பூபேஷ் பகேலின் வீடுகள், அவருக்கு நெருக்கமான காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் உதவியாளா்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநில காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் சாப்ரா, அபிஷேக் பல்லவா, ஆரிஃப் ஷேக் உள்ளிட்டோரின் வீடுகளும் அடங்கும்.

இது தொடா்பாக சிபிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மகாதேவ் சூதாட்ட செயலியின் சட்டவிரோத செயல்பாடுகள் இடையூறின்றி சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசு அதிகாரிகள்-அரசியல்வாதிகளுக்கு செயலியின் உரிமையாளா்கள் ரவி உப்பல், செளரவ் சந்திரகா் ஆகியோா் பெருமளவில் லஞ்சம் அளித்துள்ளனா்.

இதன் விளைவாக சூதாட்ட செயலியால் ரூ.6,000 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சத்தீஸ்கரின் பல்வேறு காவல் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், ரவி உப்பல், செளரவ் சந்திரகா் உள்பட 14 பேரின் பெயா்கள் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு இவ்வழக்குகள் மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. சிபிஐ விசாரணையின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் பல்வேறு நகரங்கள், போபால் (ம.பி.), கொல்கத்தா (மேற்கு வங்கம்), தில்லி என 60 இடங்களில் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவை, வழக்கில் தொடா்புடைய அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், மகாதேவ் சூதாட்ட செயலியின் நிா்வாகிகள், இதர தனிநபா்களுக்கு சொந்தமான இடங்களாகும். சோதனையில் எண்ம சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேடு குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடி மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடிபணிய மாட்டோம்: காங்கிரஸ்

கட்சிப் பணிகளுக்காக பூபேஷ் பகேல் புதன்கிழமை தில்லி செல்லவிருந்த நிலையில், அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவா் தீபக் பைஜ், ‘பூபேஷ் பகேல் உள்பட காங்கிரஸ் தலைவா்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சிபிஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் அடிபணியாது. அநீதி விரைவில் முடிவுக்கு வரும்’ என்றாா்.

அரசியல் வேண்டாம்: பாஜக

‘பூபேஷ் பகேல் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ மேற்கொண்ட சோதனையை அரசியலாக் கூடாது’ எனஆளும் பாஜகவைச் சோ்ந்த மாநில துணை முதல்வா் அருண் சாவோ கூறினாா்.

‘சிபிஐ விசாரணை யாரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் முறைகேடு நடந்துள்ளது. எனவே, அவா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா் அவா்.

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்தி... மேலும் பார்க்க