செய்திகள் :

``சூரியனார் கோயில் மடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சிலைகள் திருட்டு'' - மகாலிங்கசுவாமி புகார்

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார். இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையானது.

மகலிங்க சுவாமி

இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், 'ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை மகாலிங்கசுவாமி இழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, மகாலிங்கசுவாமி ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்தார். மேலும், ''முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போகிறேன் என கூறிச் சென்றார்.

இதையடுத்து, இந்த விவகாரம் அடங்கியது. இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு மகாலிங்கசுவாமி தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராமிடம் மனு ஒன்றை அளித்தார். இதில், திருமங்கலகுடியை சேர்ந்த பாபு என்கிற ரத்தினவேல், சூரியனார்கோவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் மற்றும் சில சமூக விரோதிகள், சிலரின் துாண்டுதலின் பேரில், என் மீது போலியாக விமர்சனம் செய்து மானபங்கப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பி விட்டார்கள். இது ஏன் என்று பதற்றத்தில் அப்போது எனக்கு புரியவில்லை. தற்பொழுது தான் ஊர் மக்கள் பேசுவதில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது.

சூரியனார் கோயில் ஆதினத்தின் மடாதிபதி

மேலும், 500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள். விலை உயர்ந்த மரகதங்கள் படிகங்கள், நான் இல்லாத நேரத்தில் எடுத்துச் சென்று விட்டனர். எனவே, இந்த புகாரை தீர விசாரித்து, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். மேலும், என்னுடைய உயிருக்கும், சூரியனார்கோயில் ஆதீன சொத்திற்கும் சமூக விரோதிகளால், ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மகாலிங்சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் வடமாநில யாத்திரை சென்றிருந்தேன். ஆத்மார்த்த சுவாமிகள் படிக லிங்கம், சுமார் ஒரு அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான், நடராஜர் - சிவகாமசுந்தரி, முருகன் ஐம்பொன் சிலை என ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருடு போயுள்ளது. நான் மீண்டும் ஆதீனமாக தொடர உள்ளேன்." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமும் உங்கள் வசமாகும்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சர்வ வஸ்ய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தால் உங்கள் விருப்பமான காரியங்களை சிறப்பாக நிறைவேற... மேலும் பார்க்க

சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் ... மேலும் பார்க்க

சமயபுரம் தல வரலாறு: அர்த்த ஜாமத்தில் கொலுசுச் சத்தம்; அம்மனே நமக்காக விரதம் இருக்கும் அதிசயம்

ஶ்ரீரங்கம், 108 திவ்ய தேசங்களில் தலைமைப்பீடம். அங்குதான் ஆதியில் கோயில் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அண்ணன் அரங்கன் அமைதியே உருவான சாந்தமூர்த்தி. ஆனால் தங்கையோ ருத்ர ரூபிணி. அவளின் ருத்ராம்சம் பொறுக்கமுடிய... மேலும் பார்க்க

`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; பதிவு செய்யுங்கள்

2025 மார்ச் 28-ம் தேதி சென்னை கொரட்டூர் பாடலாத்ரி சீயாத்தம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்... மேலும் பார்க்க

கச்சத்தீவு: விமர்சையாக நடைபெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா; குவிந்த இருநாட்டு பக்தர்கள் | Photo Album

Katchatheevu row: கச்சத்தீவு அரசியல் நமக்கு என்ன கொடுக்கும்? - ஒரு விரிவான அலசல்!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Pa... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க